பட்டாக்கத்தியுடன் திமுகவினர் அடாவடி – பட்டப்பகலில் பேக்கரி சூறையாடல்

மதுரை அருகே பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த திமுக இளைஞரணி செயலாளர் அசோக் என்பவர், சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் அதிமுக-வினருடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை – திண்டுக்கல் சாலையில் அதிமுக பிரமுகர் நடத்தி வரும் பேக்கரி கடைக்கு பட்டாக் கத்தியுடன் வந்த அசோக்கும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். பேக்கரி மூடப்பட்டிருந்த நிலையில், வெளியே இருந்த டேபிள், சேர், கண்ணாடி, ஜன்னல் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர்.

ஆளுயர கத்தியுடன் சாலைகளில் சுற்றித் திரிந்த திமுக-வினரைக் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version