திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாததால் மக்கள் அதிருப்தி

பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால், கோரிக்கை மனுக்கள் தர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி உள்ளார். அவர் இதுவரை தொகுதி பக்கம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள், அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால் அதிருப்தி அடைந்தனர். தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கிருஷ்ணசாமி கடும் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக சட்டமன்ற உறுப்பினரின் செயல், மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version