மணல் திருடிய வழக்கில் திமுகவினர் கைது!

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த காவல்துறையினர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  திண்டுக்கல் மாவட்டம் வேலன் சேர்வைகாரன்பட்டியில் மாட்டு வியாபாரம் செய்து வரும் முருகன் என்பவரது தோட்டத்தில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம், திமுகவை சேர்ந்த சிலர் திருட்டுதனமாக மணல் அள்ளி கள்ள சந்தையில் விற்று வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த கன்னிவாடி காவல்துறையினர் நாகராஜ், முருகன், கந்தவேல், கார்த்திகேயன், செந்தில்குமார், ராமர் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் மணல் திருட பயன்படுத்தப்பட்ட 5 டிராக்டர், ஒரு ஜேசிபி வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

Exit mobile version