விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர்கள் திமுகவினர் : அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

நல்லாளம் கூட்ரோட்டில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து விழாவில்  பேசிய அவர், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர்கள் திமுகவினர் என விமர்சனம் செய்தார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை எந்த கோப்புகளும் தேங்குவது கிடையாது எனக் கூறிய அமைச்சர் சிவி.சண்முகம், இதுவரை முதலமைச்சர் 18 ஆயிரம் கோப்புக்களில் கையொப்பம் இட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version