காலி நாற்காலிகள் மத்தியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக விழா

மதுரையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி பிரசாரம் செய்யும் போது காலி நாற்காலிகளே காணப்பட்டது. ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகமெங்கும் உள்ள தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சி நிர்வாகிகளும், தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மதுரையில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்ட திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, கே.எஸ் அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, மதுரை தினமணி திரையரங்கம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வெங்கடேசனை அறிமுகப்படுத்தி அவர் மேடையில் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்களிடையே இருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை விட காலியான இருக்கைகளின் எண்ணிக்கையே அந்த மேடையில் அதிகமாக காணப்பட்டது.

Exit mobile version