முதியவரை எட்டி உதைக்கும் திமுக நிர்வாகி

திமுக கூட்டணியை பற்றி விமர்சித்த முதியவர் ஒருவரை, திமுக நிர்வாகி நெஞ்சில் எட்டி உதைக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எருதப்பன்பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், திமுக காங்கிரஸ் கூட்டணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சித்து நண்பர்களிடம் பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த திமுகவினர், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ள பொன்ராம் என்பவரிடம் இதுப்பற்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஊரின் மையப்பகுதியில் இருந்த அந்த முதியவரை கீழே தள்ளி திமுக நிர்வாகி பொன்ராம், சரமாரியாக தாக்கினார்.

Exit mobile version