தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த 2 பேர் தலைமறைவு

திருப்பூரில், தீபாவளி சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்தவரை கண்டுபிடித்து தரக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாசு, தினேஷ் ஆகியோர், தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், இவர்களிடம் பணம் கட்டி உள்ளனர். 720 பேர் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கட்டிய நிலையில், வாசு, தினேஷ் ஆகியோர், பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version