தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கான சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version