தீபாவளியை முன்னிட்டு ஆடைத் தயாரிப்பு பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களில் தீபாவளியை முன்னிட்டுத் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான குடிசைத் தொழிலாளர்களும், பெரும் நிறுவனங்களும் ஆடைத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டுத் தொழிலாளர்கள் ஆடை தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தடையில்லா மின்சாரம் கிடைப்பதால் உற்பத்தி தொய்வு இல்லாமல் நடைபெறுவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version