ஆளுநர் மாளிகையில் ஆதரவற்ற மாணவர்கள் தீபாவளி கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், சென்னை ஆளுநர் மாளகையில், ஆதரவற்ற பள்ளி மாணவ – மாணவிகள் தீபாவளியை கொண்டாடினர்.

தீபாவளி என்றாலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். முதன் முறையாக, சென்னை ஆளுநர் மாளிகையில், ஆதரவற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் தீபாவளி கொண்டாடினர்.

சென்னையில் உள்ள 12 ஆதரவற்ற பள்ளியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், இதில் கலந்து கொண்டனர்.ஆளுநர் மாளிகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் தீபாவளி கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது குழந்தைகள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தீபாவளி வாழ்த்து கூறினார். குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆளுநர் கூறினார். தமிழக ஆளுநருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியது பற்றி மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

Exit mobile version