பன்முகத் தன்மை நாட்டின் மிகப்பெரிய வலிமை : குடியரசுத் தலைவர் உரை

பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை பதவியில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக, குடியரசு தின உரையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை குடியரசு தின நாளில் நினைத்து பார்க்க வேண்டும் என்றார். கல்வி, மருத்துவம், கலை, விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமைப் பதவி வகித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

பன்முகத் தன்மையே நாட்டின் மிகப்பெரிய வலிமை என்று குறிப்பிட்ட அவர், தற்போது நாடு நெருக்கடி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும், 21 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள், முதல்முறையாக வாக்களிக்க இருப்பதால் இந்த தேர்தல் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.

Exit mobile version