நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி, திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு

நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் உடைந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டியில் உள்ள திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டி- செளரிபாளையம் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version