பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது

பெரம்பலூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. போட்டியினை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 500க்கும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Exit mobile version