மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், ஈட்டி எரிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக இணை பேராசிரியர் நாகசுப்பிரமணி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Exit mobile version