கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இளம் மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த போட்டிகளில் 23 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மியூசிக் சேர், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்டப் போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. போட்டிகளில் வெற்றிப்பெறும் மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் கேடையங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், குழந்தைகளின் திறமைகளை மேலும் வளர்க்கும் விதமாக அவர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளபடுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version