திருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி

திருவள்ளூரில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 8 வயது முதல் 18 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவ மாணவிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போட்டியினை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.

Exit mobile version