குமரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி !

குமரியில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான 13-வது ஆண்டு கராத்தே போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பள்ளிகளிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் 300-க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் கராத்தே போட்டிகளில் ஆவலுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான அடுத்த சுற்று போட்டி கடலூர் மாநில அளவில் நடைபெறும்.

Exit mobile version