சேலம் மாவட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் சங்ககிரிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி பொதுமக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பசுமை தொகுப்பு வீடு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தல் கற்பிணி பெண்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்தும், அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார். அங்கன்வாடி நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

Exit mobile version