ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆடி மாதத்தையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேரோட்டம் கொடியேற்றத்துடன் கடந்த ஜூலை 27 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. இதுவரை இல்லாமல் இந்த வருடம் தேரை நிறுத்த சக்கரங்களில் நவீன இயந்திரமான ஹைட்ராலிக் ஏர் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

Exit mobile version