கரூர் அருகே தூர்வாரப்பட்ட வாய்க்காலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள மயிலாடி பகுதியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்குள்ள பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த 21ம் தேதி பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். 

Exit mobile version