காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகரில் பெருந்தலைவர் காமராசஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கல்விக்கண் திறந்த காமராசஜரின் 117 பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்களையும், காமராஜரின் உடைமைகளையும் பார்வையிட்டு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Exit mobile version