ஈரோடு அருகே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில், வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் கதிரவன், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது, வாக்கு எண்ணும் பணி சற்று தாமதமாக நடைபெற்றதால், தேர்தல் ஊழியர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version