பொதுமக்களை திமுக எம்.எல்.ஏ அலட்சியப்படுத்தி சென்றதால் அதிருப்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மேம்பாலம் மற்றும் சாலை வசதி கோரி, திமுக எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்பூரில் இருந்து ரெட்டித்தோப்புக்கு செல்லும் சாலை, ரயில்வே பாலத்தின் கீழ் செல்வதால், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு மேம்பாலம் அமைத்துத் தரக்கோரியும், குண்டும் குழியுமாக உள்ள ரெட்டித்தோப்பு சாலையை சீரமைத்து தரக்கோரியும், திமுக எம்.எல்.ஏ வில்வநாதனிடம் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அச்சாலையில் வாகனத்தில் வந்தவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. ஆயினும், பொதுமக்களை அலட்சியப்படுத்திய எம்.எல்.ஏ, காரை விட்டு கூட கீழே இறங்காமல், அங்கிருந்து சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியது.

Exit mobile version