கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாலைக்குள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மாலைக்குள் சபநாயகர் முன்பு ஆஜராக வேண்டுமென்றும், ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் இன்றைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version