மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, பல்ஸ் ஆக்சி மீட்டர் (pulse oximeter), தெர்மல் ஸ்கேனர், கபசுரக் குடிநீர் சூரணம், முகக்கவசம் உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று, செவிலியர்களுக்கு பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Exit mobile version