தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வீடியோ கன்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நாளை நடைபெற உள்ளதாகவும் கூறினார். 23 மற்றும் 24ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இதை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version