ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி சென்றபோது கண்மாய் பகுதியில் கிடைத்த 12 நாட்டு வெடிகுண்டுகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்ட் காலனி பகுதியில் சண்முகம் என்பவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து கிடைத்த தகவலின்பேரில், ராஜபாளையம் அருகேயுள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version