ரஜினி படத்தை இயக்க மறுத்த இயக்குனர்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தை இயக்க மறுத்த இயக்குனர் பிரித்விராஜ் அதற்காக நீண்ட மன்னிப்புக் கடிதம் ஒன்றை அவருக்கு  எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது அனைத்து இயக்குனர்களின் கனவாக இருக்கும். ஆனால் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்ட படத்தை இயக்க மறுத்ததாகவும், அதற்காக அவருக்கு நீண்ட மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும் இயக்குனர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், பாரிஜாதம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் பிரித்திவிராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் மோகன்லால் வைத்து ‘லூசிஃபர்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குனர் பிரித்திவிராஜ் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் அடுத்த படத்திற்கு கதை கேட்டுள்ளார். அந்த கதை ரஜினிக்கு பிடித்துப்போக அவர் நடிக்க முடிவு செய்தார். ஆனால் தன்னுடைய முடிவை மூன்று வாரங்களுக்குப் பிறகு சொன்னதால் இயக்குனர் பிரித்திவிராஜ் இந்த படத்தை இயக்க மறுத்து விட்டார்.

அதற்கு காரணம், ரஜினியிடம் இருந்து முடிவு வரை காலதாமதம் ஆனதால் தான்  வேறு ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டதாகவும், இதுகுறித்து ரஜினியுடன் பேசியபோது அவர் என் நிலையை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ரஜினிக்கு நீண்ட மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version