இயக்குநர் லிங்குசாமியின் 'கற்று கொடுக்கிறது மரம்' நூல் வெளியிட்டு விழா

இயக்குனர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதைகளை வைத்து எழுதப்பட்ட, ‘கற்று கொடுக்கிறது மரம்’ நூல் வெளியிட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

அவனியாபுரம் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவ்யன் அபார்ட்மென்ட்ஸ் குழுமத்தின் அபார்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி, ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காவ்யன் குழும தலைவர் சின்னமருது தீனதயாள பாண்டியன், அனிதா தீனதயாள பாண்டியன், அதிமுக வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி சக்சேனா, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதைகளை வைத்து, கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்று கொடுக்கிறது மரம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

Exit mobile version