வர்மா படம் குறித்து இயக்குனர் பாலா அதிரடி அறிவிப்பு

வர்மா படம் குறித்து இயக்குனர் பாலா கூறியது: 

வர்மா படத்தை தயாரிப்பு நிறுவனம் கைவிட்ட நிலையில், அப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலா அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழில் இயக்குநர் பாலாவையும், நடிகர் விக்ரமின் மகன் துருவையும் வைத்து ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டது. வர்மா எனத்தலைப்பிடப்பட்ட இப்படம் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட உருவாக்கத்தில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதால் ஒட்டுமொத்த படத்தையும் கைவிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து பாலா அளித்துள்ள விளக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும் அவர் படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகியது தான் மட்டுமே எடுத்தமுடிவு என்றும், துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி, இப்பிரச்னை குறித்து மேலும் பேச விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தை தங்களின் பார்வைக்குக்கு

Exit mobile version