இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து சர்ச்சைகளை ‘சர்கார்’ திரைப்படம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி ‘கத்தி’ திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் எடுத்துள்ளதாக அந்த குறும்படத்தின் இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளர். இதனால் அவருடைய உடல்நிலை மோசடைந்துள்ளது.

இதையடுத்து அன்பு ராஜசேகருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் தனிப்பிரில் தஞ்சை மாவட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே ‘சர்கார்’ படம் செங்கோல் என்ற திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது, ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைப்பில் வெளிவந்து வெற்றியடைந்த ‘கத்தி’ திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version