தேவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : முதலமைச்சருக்கு நன்றி

சேலம் மாவட்டம் தேவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை அடுத்து, சேலம் மாவட்டம் தேவூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

100 கிலோ மூட்டை நெல் ஆயிரத்து 850 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத்தந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version