தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குரும்பிவயல் மற்றும் பட்டத்திக்காடு கிராமங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் உள்ள பகுதிகளில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version