அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்-அமைச்சர் காமராஜ்

அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் மற்றும் காதொலி கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பயனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் மற்றும் காதொலி கருவிகளை வழங்கியதுடன், வேலைக்கு செல்லும் 50 மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்களையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் விளையும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், பிற மாவட்டத்திற்கு சென்று நெல்லை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

Exit mobile version