டிப்பர் லாரியுடன் கிணற்றில் விழுந்த 3 தொழிலாளர்கள்: ஒருவர் உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம், வீரபாண்டி பகுதியில் டிப்பர் லாரியுடன் கிணற்றில் விழுந்த 3 தொழிலாளர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை சின்னதடாகம் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளது. இந்த செங்கல் சூளைகளில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ராசப்பன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்யும் மணி, செல்வம், மற்றும் பாலமுருகன் ஆகியோர் டிப்பர் லாரியில் வந்துள்ளனர்.

அப்போது, லாரியை திருப்பும்போது, திடீரென கட்டுபாட்டை இழந்த லாரி அருகில் இருந்த 150 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தன் பேரில் தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் உள்ளே இறங்கி மணி என்பவரை மீட்டனர். மற்ற இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version