வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை கோடை விழாவை அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோடை விழாவில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கோடைத் திருவிழாவில் பொதுமக்களை கவரும் வண்ணம் தமிழக அரசு கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் திமுகவின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version