திண்டுக்கல்லில், ரூ.327 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி: முதல்வர், துணை முதல்வர் அடிக்கல் நாட்டினர்

திண்டுக்கலில் புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் பகுதியில் 327 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமான பணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். விழாவில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version