அ.தி.மு.கவை அழித்து விடலாம் என்ற தினகரனின் கனவு பலிக்காது -கே.சி.வீரமணி

அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்த துரோகிகளுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி அழைத்துச்சென்று, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றிவிடலாம் என்று தினகரன் திட்டமிட்டதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் துரோகிகளுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளித்துள்ளதாக அமைச்சர் வீரமணி கூறினார். அ.தி.மு.கவின் எதிரிக் கட்சியான திமுகவுடன், உறவு வைத்துக் கொண்டு, அ.தி.மு.கவை அழித்துவிடலாம் என்ற தினகரனின் கனவு பலிக்காது என அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version