தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு மீது போலீசார் வழக்குப்பதிவு

பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் ஆதரவு பெற்ற பெரியகுளம் சுயேட்சை வேட்பாளரும், மருத்துவருமான கதிர்காமு, தன்னிடம் சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கதிர்காமு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version