பொதுமக்கள் ஆதரவு இல்லாததால் கலைந்து சென்ற தினகரன் ஆதரவாளர்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர், பொதுமக்கள் கண்டு கொள்ளாததால் ஏமாற்றத்துடன் சென்றார்.

தூத்துக்குடியின் தருவைகுளம், பட்டிணமருதூர் ஆகிய பகுதிகளில் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டனர். தினகரன் ஆதரவு வேட்பாளர் திறந்த வேனில் நின்ற படி அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் அவர்களுடைய பிரசாரத்தை பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தினகரன் ஆதரவாளர்கள் விரைவாக பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்றனர்.

Exit mobile version