பிரசாரத்திற்கு பள்ளிச் சீருடையில் சிறுமிகளை அழைத்து வந்த தினகரன் ஆதரவாளர்கள்

திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பங்கேற்ற பிரசாரத்திற்கு பள்ளிச் சீருடையில் சிறுமிகளை அழைத்து வந்தது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன், ஜோதி முருகன் என்பவரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளிக்கும் கோவிலுக்கும் அருகே முக்கிய சாலையை வழிமறித்து பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அவதியடைந்தனர். பிரசாரத்திற்காக சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்த பள்ளிச் சிறுமிகளை அழைத்து வந்ததோடு அவர்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியது கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version