தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு : முன்னாள் ஏடிஎஸ்பிக்கு 5 ஆண்டு சிறை

மதுரை தினகரன் அலுவலக எரிப்பு சம்பவத்தை தடுக்க தவறிய கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு திமுகவின் குடும்பச் சண்டை காரணமாக, அழகிரி ஆதரவாளர்களால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதில், அலுவலக ஊழியர்கள் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கில் தொடர்புடைய அட்டாக் பாண்டி, திருச்செல்வம் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அலுவலக எரிப்பு சம்பவத்தை தடுக்க தவறிய அப்போதைய கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version