டி.டி.வி தினகரன் பிரசாரத்தில் மது அருந்துவிட்டு அமமுகவினர் அநாகரிக நடனம்

சென்னையில் டி.டி.வி தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அமமுகவினர் குடித்திவிட்டு குத்தாட்டம் ஆடியும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. டி.டி.வி தினகரன் பூவிருந்தவல்லியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அமமுகவினர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அவரது தொண்டர் ஒருவர் இளம்பெண்கள் முன் குடித்துவிட்ட நாகரீகம் அற்ற முறையில் நடனம் ஆடியது காண்போரை அதிருப்தியடைய செய்தது. மேலும் பிரசாரத்தில் வந்த அமமுக வினர் சிலரை தவிர பொதுமக்கள் அனைவரும் டிடிவி தினகரன் பேசி கொண்டிருக்கும் போதே கலைந்து சென்றனர்.

Exit mobile version