டிஜிட்டல் மயமாகும் தமிழக சட்டசபை: அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழக சட்டசபை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் டெல்லி மேல்-சபை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய இ-விதான் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சட்டசபைகளில் பேப்பர்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும். இ-விதான் திட்டம் நடை முறைக்கு வந்ததும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் நாடாளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக்கும். தமிழக சட்டசபையில் இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இதை சட்டசபை குழு கூட்ட அறையில் இன்று சபாநாயகர் தனபால் தொடங்கி வைக்கிறார்.

Exit mobile version