நீதிமன்ற உத்தரவை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைத்த திமுகவினர்

கடலூர் மாவட்டம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி திமுகவினர் வைத்துள்ள கல்வி நிறுவன பேனர்களால் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகளும் நடைமுறையில் உள்ள நிலையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைத்திருப்பி விபத்தை ஏற்படுத்தும் வகையில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் திமுகவினர் தங்களது கல்வி நிறுவன விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

விதிமுறைகளை மீறுவதோடு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ள திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version