இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 6 பேரின் மாதிரிகளில் வித்தியாசம்.!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேரின் கொரோனா பரிசோதனை மாதிரியில் வித்தியாசம் இருப்பதால், மீண்டும் பரிசோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள், இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேரின் மாதிரிகள், வித்தியாசமாக இருப்பதாக புனே ஆய்வகம் தெரிவித்துள்ளது. மீண்டும் பரிசோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Exit mobile version