டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த மோதல் வன்முறையாக வெடித்தது. மவுஜ்பூர், பாபர்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 27ஆக அதிகரித்துள்ளது.

உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் சடலம், வடகிழக்கு டெல்லியின் சாந்த்பாக் பகுதியில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. வன்முறையில் படுகாயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version