தமிழர்களின் பிரச்னைகளுக்கு திமுக குரல் கொடுத்தது உண்டா?- அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக எப்போதும் மக்களின் கூட்டணி என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எந்த ஒரு கட்சியாலும் அதிமுகவிற்கு பாதிப்பில்லை எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது எனக் கூறினார். ஒருகாலத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக தமிழர்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தது உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version