ஓவிய கலைஞனாக வரவேண்டும் என சிறு வயதில் ஆசைபட்ட தோனி

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தான் வரைந்த ஓவியங்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வித்தியசமான சிகை அலங்காரத்தோடு தோன்றும் தோனி, தான் சிறு வயதில் வரைந்த ஓவியங்களை கையில் வைத்தவாறு பேசுகிறார். வீடியோவில், ஓவிய கலைஞனாக வரவேண்டும் என்று சிறு வயதில் ஆசைபட்டதாகவும், தற்போது சில ஓவியங்களை உருவாக்கியுள்ளதாகவும், கூறியுள்ளார். மேலும், தான் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டதாகவும், தற்போது இந்த ஓவியங்களை வைத்து கண்காட்சி தொடங்க இருப்பதாகவும், தனக்கு ஆலோசனை வழங்குமாறும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவால் தோனி ஓய்வு குறித்து ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

Exit mobile version