கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை பெருந்தன்மையாக மறுத்த டோனி…

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஓய்வு பெரும் பட்சத்தில் சொந்த மண்ணில் அவர் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கும். இந்நிலையில் டோனியை கௌரவப்படுத்தும் விதமாக ராஞ்சி மைதானத்தில் உள்ள ஒரு பெவிலியனுக்கு, ” M.S.DHONI PAVILION” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் விழா ஒன்றையும் மைதான நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். அதற்கு தலைமை ஏற்க வருமாறு டோனியிடம் கேட்கப்பட்டது. ஆனால் “என்னுடைய வீட்டை நானே திறந்து வைப்பதா” என தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார் டோனி. அவருடைய பதிலை மதிப்பதாக மைதான நிர்வாகிகள் கூறியுள்ளனர். கிரிக்கெட் உலகில் டோனியின் பண்பு மட்டும் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

Exit mobile version